சென்னை: நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2017ல் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோது அவரை அவதூறாக விமர்சித்ததாக வழக்கு தொடரப்பட்டது. அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வழக்குகளை ரத்து செய்யக்கோரி நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.