×

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் காவல் அதிகாரிகளை நியமனம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு..!!

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் காவல் அதிகாரிகளை நியமனம் செய்து பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். குற்றவாளிகளை கண்காணித்து, கைது செய்ய அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவு உருவப்பட்டது என்று சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 54 பேர் கொண்ட காவலர்கள் அதி தீவிர குற்றப்பிரிவில் பணியாற்ற உள்ளனர். தெற்கு பகுதியில் குணசேகரன், பிரபுவும் வடக்கு பகுதிக்கு ஸ்ரீதர், பார்த்திபனை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.


Tags : Commissioner ,Shankar Jiwal , Extreme Crime Prevention Unit, Police, Shankar Jiwal
× RELATED மதுரை உதவி ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து..!!