திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள துரைராஜ் வினோதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சுயநினைவு இல்லாமல் தந்தை மீது கல்லை போட்டு கொன்ற சூழலில் இவரை தண்டிப்பது ஏற்புடையது அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.