சென்னை: வடகிழக்கு பருவமழை நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திர ராயலசீமா கரையோரத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தெற்கு உள்கர்நாடகம், கேரள பகுதிகளில் இருந்தும் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பிருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் ஜனவரி 25ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.