சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக மொத்தமாக 1020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.