சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கீழடி, சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய 7 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். சங்க கால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண முன்கள புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.