×

தமிழகத்தில் நடப்பாண்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கீழடி, சிவகளை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய 7 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். சங்க கால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண முன்கள புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Tamil Nadu ,KKA ,Stalin , Tamil Nadu, Archaeological Excavations, Chief Minister MK Stalin
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...