சென்னை: நிதியுதவி வழங்கினார் என்பதற்காக நிர்வாகியாக நியமிப்பதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வட்டு எறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில்; தேசிய அளவிலான தடகள போட்டியில் மாநில தடகள விளையாட்டு சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை என குருப்பிட்டிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வீராங்கனை நித்யா தொடர்ந்த வழக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்த்துள்ளார். தகுதியற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட விளையாட்டு சங்கத்தை 2 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும்.