சென்னை: ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்யத் தெரியாத விவசாயிகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். நெல் கொள்முதல் நிலையங்களில் தனி ஊழியர்களை நியமித்து ஆன்லைனில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.