சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ஜி.எஸ்.மணி என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. குழு அமைக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கை வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி வாபஸ் பெற்றார்.