கிருஷ்ணகிரி: மேகதாது அணை கட்ட கோரும் கர்நாடக காங்கிரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஓசூர் அருகே பேரணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் காவிரி உரிமையை பாதுகாக்கக்கோரி தமிழக எல்லையான ஜூஜூவாடி வரை பேரணி செல்கின்றனர்.