சென்னை: கொரோனா 3வது அலை உச்சத்தில் இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சார்பில் வழக்கறிஞர் முறையீடு செய்திருக்கிறார். மனுவில், தற்போதையை சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளி வைக்க வேண்டும். தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.