சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாக சென்றனர். பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் வாகனங்கள் குறைவாகவே காணப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் 2வது நாளான நேற்று மாலை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.