கடலூர்: கடலூரில் என்எல்சி 3வது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் கருத்து தெரிவித்துள்ளார். நில உரிமையாளர்கள் மனம் திருப்தியடையும் வகையில் உரிய விலை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நிலம் கொடுக்கும் குடும்பங்களில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என எம்எல்ஏ அருண்மொழிதேவன் வலியுறுத்தியுள்ளார்.