டெல்லி: கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 23ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. கொரோனா சூழல் காரணமாக மாநில அரசுகள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் தேதி மாற்றப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.