×

அன்னவாசல் அருகே சகதிக்குள் சிக்கிய பசு மாடு மீட்பு

விராலிமலை : அன்னவாசல் அருகே விவசாய நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரால் உருவான சகதிக்குள் சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.அன்னாவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் சின்னையா. விவசாயியான இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று நேற்று அப்பகுதி வயல்வெளியில் மேய்ச்சலுக்கு சென்றபோது அங்கு தற்போது பெய்த மழை நீரில் ஊறி கிடந்த சேறும் சகதியான பகுதிக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் போராடியவாறு சத்தம் எழுப்பி உள்ளது.

இதனை கண்ட அங்கு பணியில் இருந்த விவசாய பணியாளர்கள் இது பற்றி இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவயிடம் வந்த நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Tags : Annavasal , Viralimalai,Cow, Annavasal
× RELATED வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8...