திருச்சி: திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலியானார். காலை முட்டி பார்வையாளர் வினோத் என்பவர் உயிரிழந்த நிலையில் 26 பேர் காயமடைந்துள்ளனர். 800 மாடுகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ள போட்டிக்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.