டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் குடியரசு தினவிழாவை காண்போர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2021ல் 25,000 பேர் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு 5,000 முதல் 8,000 பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் பட்டியல் இன்னும் தயாராகவில்லை எனவும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவலளித்துள்ளது.