×

முழுஊரடங்கில் பழுதடைந்த நெடுஞ்சாலைகளை செப்பனிடுங்கள்: மத்திய, மாநில அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: முழுஊரடங்கு காலங்களில் பழுதடைந்த நெடுஞ்சாலைகளை மத்திய, மாநில அரசுகள் செப்பனிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். முழு ஊரடங்கு நேரத்தில் மேற்கொண்டால் போக்குவரத்து இடையூறின்றி குறுகிய காலத்தில் சாலைப்பணியை முடிக்க முடியும் என்றும் ஜி.கே.வாசன் அறிவுரை வழங்கியுள்ளார். குறுகிய காலத்தில் சாலைப்பணியை முடிப்பதால் அதிகமான செலவும், நேரமும் மிச்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


Tags : GK ,Vasan ,Central and State Governments , Full Curfew, Highway, GK Vasan
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...