×

குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பதற்கான காரணங்கள் சரியில்லை: கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கருத்து

டெல்லி: குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நிராகரிப்புக்கு ஒன்றிய அரசு கூறிய காரணங்கள் சரியில்லை என்று கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். வ.உ.சி. வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம், நிபுணர் குழுவின் புரிதல் இது எனவும் அதனை திருத்துவதற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது என கவிஞர் பதிவிட்டுள்ளார்.     


Tags : Tamil Nadu ,Republic Day ,Poet Vairamuthu ,Twitter , Republic Day, Tamil Nadu, vehicle, rejection, poet Vairamuthu, comment
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...