×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா; 310 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 1,57,421 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.3 லட்சத்தை தாண்டியது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.86 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.76 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,38,018 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,76,18,271 ஆக உயர்ந்தது.

* புதிதாக 310 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,86,761 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,57,421 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,53,94,882 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,36,628 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 94.09% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.29% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.62% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் 1,58,04,41,770 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 79,91,230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , Corona to 2,38,018 people in India in the last 24 hours; 310 deaths: 1,57,421 people recovered from the infection and discharged
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...