×

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு பதவி உயர்வு முதல்வருக்கு தொமுச நன்றி

சென்னை : கோ-ஆப்டெக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய முதல்வருக்கு தொமுச சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் எம்.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கடந்த 4-10-2021 அன்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்திற்கும், கோ-ஆப்டெக்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

அதன்படி, ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட முக்கிய நிலையங்களில் வேலை நேரம் இரவு 9 மணியில் இருந்து இரவு 8.30 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 46 விற்பனையாளர்களுக்கு இரண்டாம் நிலை மேலாளராகவும், 6 முதல்நிலை மேலாளர்களுக்கு விற்பனை மேலாளராகவும் பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு வழங்கிய முதல்வருக்கும், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் டி.பி.ராஜேஷ் ஆகியோருக்கும் கோ-ஆப்டெக்ஸ் தொமுச சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags : Co-Optex , Co optex, MK Stalin,
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்