வண்டலூர் : செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. பூங்காவில் பணி புரியும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பூங்கா நிர்வாகம் அறிவிப்பு. 17.01.2022 முதல் 31.01.2022 வரை பூங்கா மூடப்படுவதாகவும் பின்னர் நிலைமையை ஆராய்ந்த பின் முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு