×

ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

சென்னை : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  ரவிச்சந்திரனுக்கு 2 வது முறையாக  ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரவிச்சந்திரனுக்கு கடந்த நவம்பர் 17ம் தேதி 30நாள் விடுப்பு வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 16ம் தேதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்தது தமிழக அரசு. இந்நிலையில் இன்றுடன் பரோல் நிறைவடைந்த நிலையில் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு. உத்தரவிட்டுள்ளது.


Tags : Ravichandran , Parole, Tamil Nadu, Rajiv Gandi, murder Case
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்