டெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவ 300 முதல் 400 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர் என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்திருக்கிறார். எல்லையில் நிலைமை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் கொடுத்து வருகிறது. என்கவுன்ட்டரில் 144 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சீனாவால் பதற்றம் நிலவிய நிலையில் 14ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று ராணுவ தளபதி நரவானே குறிப்பிட்டார்.