×

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவு!: 221 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 10 பேர் காயம்

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவுப்பெற்றது. 3 சுற்று நிறைவில் இதுவரை 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்த வீரர்களுக்கு தற்காலிக சிகிச்சை முகாமில் மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.

3-ம் சுற்று முடிவில் 7 காளைகளை அடக்கி சிவசாமி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழரசன் என்பவர் 5 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்துள்ளார். மாடு முட்டியதில் படுகாயமடைந்த 9 மாடுபிடி வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Tags : Balamedu Jallikkadu , Bridge jallikkattu, bulls, injury
× RELATED பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 6ம்...