×

தடுப்பில் கார் மோதி 7 வாலிபர்கள் பலி

தாவணகெரே: யாதகிரி, விஜயநகர், விஜயபுரா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 பேர் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து காரில், ஊருக்கு சென்றனர். அவர்கள் சென்ற கார், தாவணகெரே மாவட்டம், ஜகலூர் தாலுகா, கணகட்டே கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று அதிகாலை வேகமாக சென்று கொண்டிருந் கார் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் அமைத்துள்ள சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த மல்லண்ணா கவுடா (22), சந்தோஷ் (21), சஞ்ஜீவ் (20), ஜெய்பீம் (19), ரகு (23), சித்தேஷ் (20), வேதமூர்த்தி (18) ஆகிய 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஜகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags : Car, accident, teenagers, casualties
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...