சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக செயலாளர், சென்னை குடிநீர் வழங்கல் நிர்வாக இயக்குனர் கழிவுநீரகற்று வாரிய இயக்குனர் உள்ளிட்டோர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பின்னும் சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் கூட கேட்கப்படவில்லை என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது.