திருப்பூர்: தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய வழக்கில் பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசை கண்டித்து நேற்று பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தள்ளுவண்டி வியாபாரி பிரதமர் மோடியை விமர்சித்ததாக கூறி பாஜகவினர் அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்தது பல்லடம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.