திருவள்ளூர்: எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எர்ணாவூர் அரசுப்பள்ளியில் மீனவர்கள் உடன் நடைபெற இருந்த கருத்துக்கேட்பு கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் கருத்துக்கேட்பு கூட்டத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒத்திவைத்தது.