×

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நிறைவு

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெற்றது. நேற்று மாலை 5:30 மணிக்கு தொடங்கிய இணையதள முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

மதுரையில் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக 16ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் ஊர்மக்கள், கமிட்டியினரிடம் ஆலோசனை நடத்திய பிறகு மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் 16ஆம் தேதிக்கு பதிலாக 17ஆம் தேதி திங்கட்கிழமை அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் கொரோனா பரவல் காரணமாகஜல்லிக்கட்டு போட்டிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நேரடியாக டோக்கன் வழங்காமல் இந்த முறை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை 5:30 மணிக்கு தொடங்கிய இணையதள முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்கும்போது குடும்ப உறுப்பினர்களை தவிர மற்ற நபர்களை வீட்டின் மாடியில் அனுமதிக்கக் கூடாது எனவும் போலீசார் கூறியுள்ளனர். பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடக்கும் கிராமங்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு  செல்வதை மக்கள் தவிர்க்குமாறு காவல்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : Jallikatti ,Avaniapuram ,Palamedu ,Alanganallur , Avanyapuram, Palamedu, Alankanallur, Jallikattu, Booking,
× RELATED சட்டவிரோத பண வரவை தடுக்க மதுரை விமான...