சென்னை: சென்னையில் போகி அன்று விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் எரிக்கக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அவ்வாறு விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.