லடாக்: எல்லைகளில் சீனாவின் அச்சுறுத்தலை இந்தியா வலிமையுடன் எதிர்கொண்டு வருகிறது என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் சீன எல்லையில் பதற்றம் நீடிக்கிறது என்றும் சீன எல்லையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ தளபதி குறிப்பிட்டிருக்கிறார்.