சென்னை: பொது விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்று மனுதாரருக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை தெரிவித்தனர். புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது.