×

பொங்கல் திருநாள்!: தூய்மை பணிகளை மேற்கொள்ள சிறப்பு இயக்கம் தொடங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணை..!!

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு தூய்மை பணிகளை மேற்கொள்ள சிறப்பு இயக்கம் தொடங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை ஆணை பிறப்பித்திருக்கிறது. ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், நீர் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள சாலைகள், கிராமங்களை ஒட்டிச்செல்லும் நெடுஞ்சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.


Tags : Pongal, cleaning work, special movement, rural development
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...