சென்னை: ரேஷன் கடைகளில் இன்று முதல் அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவதால், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொங்கல் சிறப்பு தொகுப்பு 65 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.