×

ஐபிஎல்லில் ரூ.16.5 கோடிக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ் திடீர் ஓய்வு

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் (34 வயது), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2012ல் சர்வதேச டி20ல் அறிமுகமான மோரிஸ், தொடர்ந்து 2013ல் ஒருநாள், 2016ல் டெஸ்டில் களமிறங்கினார். 2019க்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு பெற்றுள்ள அவர், இதுவரை 4 டெஸ்டில் 173ரன், 12 விக்கெட், 42 ஒருநாள் போட்டிகளில் 468 ரன், 48 விக்கெட், 23 டி20ல் 133 ரன், 34 விக்கெட் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்காக  விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி இவரை ரூ.16.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்க, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றார். 81 ஐபிஎல் ஆட்டங்களில் 618 ரன், 95 விக்கெட் எடுத்துள்ளார். பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமீரகம், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 தொடர்களிலும் விளையாடி உள்ளார். ஓய்வுக்கு பிறகு தென் ஆப்ரிக்காவில் உள்ள டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் மோரிஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Chris Morris ,IPL , Chris Morris bids Rs 16.5 crore in IPL
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...