×

முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 4000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய 14 அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கியது. அப்போது யாராவது குறை சொன்னார்களா என்றால் இல்லை. ஏனெனில், அப்போது குறையில்லை, இப்போது குறை இருக்கிறது. அதைத் தான் சொல்கிறார்கள். இதிலே மற்றுமொரு குறை என்னவென்றால், பெரும்பாலான பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து, அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் தான் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. பாதி பொட்டலங்கள் இதையெல்லாம் நான் சுட்டி காட்டுவதற்கு காரணம், மக்கள்படும் அவதி, மக்களிடையே காணப்படும் குறைகள் ஆகியவற்றை தமிழக அரசின் கவனத்திற்கு, முதல்வர் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு வர வேண்டிய கடமை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : OPS , OPS request to the first
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி