×

ஐ.பி.எல். போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை கைப்பற்றியது டாடா குழுமம்!: பி.சி.சி.ஐ. அறிவிப்பு

மும்பை: ஐ.பி.எல். போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை டாடா குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்திய ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் பட்டேல், சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் விலகியதால் டாடா குழுமம் டைட்டில் ஸ்பான்சராக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விவோ நிறுவனம் 2018 முதல் 2022 வரை ஐ.பி.எல். போட்டியின் விளம்பர தாரராக செயல்பட 2,200 கோடி ரூபாய்க்கு பி.சி.சி.ஐ. உடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து 2020ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விவோ நிறுவனம் விலகியது. புதிய விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனம் செயல்பட்டது. இந்நிலையில் 2021ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கு மீண்டும் விவோ நிறுவனம் தேர்வானது. தற்போது காலக்கெடு முடிவதற்குள் விவோ ஒப்பந்தத்தில் இருந்து விலகி உள்ளது.


Tags : IPL Tata Group ,BCCI , IPL Competition, Title Sponsor, Tata Group
× RELATED ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்