×

11 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சி.வெ.கணேசன்..!!

சென்னை: அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் இயங்கி வருகிறது. இத்துறையின் பயிற்சிப் பிரிவின் கீழ் 7 மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள், 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 487 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டந்தோறும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இவ்வலுவலகங்களில் பணியாற்றி பணியிடை மரணமடைந்த 11 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன்  வழங்கினார்கள்.

Tags : 11 Minister ,C. V.V Ganesan , Civil Servant, Heir, Minister of Labor, CV Ganesan
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...