×

சிலியில் ஏழைகள் வசிக்கும் காலனியில் பயங்கர தீ விபத்து!: நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கபளீகரம்..வானை முட்டும் கரும்புகை..!!

சிலி: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் ஆல்டிபிளானோ நகராட்சியில் உள்ள ஏழைகள் வாழும் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மக்கள் இக்கூ என்ற இடத்தில் வசித்து வருகின்றனர். இங்கு திடீரென பயங்கர தீ பிடித்தது. சிறிது நேரத்தில் குடியிருப்புகளை கபளீகரம் செய்த தீ பல வீடுகளை சாம்பலாக்கியது. மரபலகைகளால் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தால் மிக வேகமாக தீ பரவியது. வீடுகளில் இருந்த உடைமைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.

அரசு தங்களை இந்த இடத்தை விட்டு வெளியேற்ற முயன்று வருவதாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சிலருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தங்களுக்கு புதிய வீடுகள் கட்டி தரும் வரை இந்த இடத்தை விட்டு செல்ல முடியாது என்று பொதுமக்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.


Tags : Chile , Chile, colony, fire, cottages
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...