×

பந்தலூர் பஜாரில் சாலையில் சுற்றித்திரியும் எருமைகளால் வாகன ஓட்டிகள் அவதி-உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பந்தலூர் :  பந்தலூர் பஜார் மற்றும் பஜாரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடு, மாடு, வளர்ப்பு  எருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன  ஓட்டிகள், வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.கடைகள் மற்றும்  சாலைகள், அரசு அலுவலக வளாகங்கள், பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பல இடங்களில்  கால்நடைகள் எச்சமிட்டு செல்வதாலும் சாலைகளில் நடமாடுவதாலும் பல்வேறு  பாதிப்புகள் ஏற்படுகிறது.

 சில நேரங்களில் வாகன விபத்துக்கள்  ஏற்படுகிறது. கால்நடைகளை முறையாக பராமரிக்காமல் பொது இடங்களில் விடும்  கால்நடை உரிமையாளர்களுக்கு நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் அபராதம்  விதித்து  தண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



Tags : Pandharpur Bazaar , Pandharpur: Sheep, cows and domestic buffaloes are on the rise in and around Pandharpur Bazaar. Thus
× RELATED சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை...