×

தருமபுரியில் பேருந்து நிலையத்தில் தவித்த 3 வயது குழந்தை - 2 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் தவித்த 3 வயது குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அன்பு - வசந்தா தம்பதியின் 3 வயது குழந்தை சபரியை அரூர் பேருந்து நிலையத்தில் தவறவிட்டதாக தெரிகிறது. நீண்ட நேரம் கண்ணீருடன் அழுத குழந்தையை பயணிகள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் 2 மணி நேரத்தில் பெற்றோரை கண்டறிந்த போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.

Tags : Dharmapuri , child
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...