×

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்கள் வீசி தாக்குதல்

யாழ்ப்பாணம்: கச்சதீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் தாக்கிய இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 471 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். நடுக்கடலில் தாங்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகளை கற்கள், பாட்டில் வைத்து எரிந்து விரட்டியடித்தும், வலைகளை வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 5- க்கும் மேற்பட்ட படகுகளுக்கு ஒரு விசைப்படகிற்கு ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   


Tags : Rameswaram ,Mediterranean , Rameswaram, Fishermen, Mediterranean, Sri Lanka, Stones-Bottles, Attack
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...