×

ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி மனு

திருவில்லிபுத்தூர்: ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக சுமார் ரூ.3 கோடி மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த செல்வராஜ், தனது மகன் ஆதித்யனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலை  வாங்கி தருவதாக கூறி, ரூ.16 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 4 பேர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் செல்வராஜ் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி, திருவில்லிபுத்தூர்  மாவட்ட குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பரம்வீர், இவ்வழக்கின் விசாரணையை இன்றைக்கு (ஜன. 11) ஒத்திவைத்தார்.

Tags : Rajendrapalaji , Petition seeking action against Rajendrapalaji in Rs 16 lakh fraud case
× RELATED ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவு...