மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த உள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து இரு குழுக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.