சென்னை: கொரோனா பரவல் தளர்வுகள் அளிக்கும் வரை முதலைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை செயலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. மிகவும் அத்தியாவசிய சூழலில் மட்டுமே முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரிடம் நேரில் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.