×

இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் வந்த 125 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் தவறு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு

பஞ்சாப்: இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ் வந்த விமானத்தில் பயணித்த 100- க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவத்தில் பலரின் சோதனை முடிவுகளில் தவறு நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் ஆய்வகத்தில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிற்கு வந்த விமானத்தில் 170 பயணிகள் பயணித்தனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியானது.

கொரோனா பரிசோதனை செய்துகொண்ட பின்னரே தாங்கள் பயணத்தை தொடங்கியதாகவும், சிலமணி நேரங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பரிசோதனை முடிவு வந்திருப்பது எப்படி என பல பயணிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து மறுபரிசோதனை செய்யப்பட்டதில் சில பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என மாறுபட்ட முடிவு வந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஆய்வகத்தின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஆய்வகத்தின் சோதனை நடைமுறை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.       


Tags : Amritsar ,Italy , Italy, Amritsar, 125 passenger, Corona, charge
× RELATED ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட...