மதுரை: அரசு வழக்கறிஞருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தை விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தை லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.