மதுரை : உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று அதற்கான ஆயத்த பணிகள் தொடங்குவதற்கான முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள் , மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. அரசின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காமல் ஊர் விழா குழுவினர் மட்டும் முன்னேற்பாடு பணிகளை துவக்கினர்.