×

துப்பாக்கி சுடும் மைய பாதுகாப்பு உறுதி செய்ய கமிட்டி: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: புதுக்கோட்டையில் சிறுவன் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக துப்பாக்கி சுடும் மையத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய கமிட்டி ஒன்றை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த 30ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 கி.மீ தொலைவில் வீட்டில் இருந்த 11 வயது சிறுவன் தலையில் குண்டு துளைத்து படுகாயம் ஏற்பட்டது. அதன் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வண்டலூர் காவலர் பயிற்சி அகாடமி இயக்குனர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் உள்ள பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆய்வில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் மலைக்குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் நடமாட்டம் நிறைந்த இடங்களில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் பிரத்யேக தடுப்புகள் எழுப்பி குண்டுகள் துளைந்து வெளியே செல்லாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படும். அதைப்போன்று துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேறு ஏதாவது ஆலோசனை வழங்க வேண்டும் என்றால் இந்த கமிட்டி வழங்கலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : DGP ,Silenthra Babu , Sniper Central Security Committee to confirm: Order of DGP Silent Babu
× RELATED மேற்குவங்க மாநில டிஜிபியை இடமாற்றம்...